இன்று முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் வங்கி சேவை நேரம் குறைப்பு

* பாஸ்புக், ஆதார் பதிவு நிறுத்தம்* ‘செக்’ நேரடி டெபாசிட் இல்லை* மாநில வங்கியாளர் குழுமம் அறிவிப்புசென்னை: தமிழகத்தில் இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை நடைபெறும் என்று மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகளை வங்கிகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அதேபோல், ஆதார் பதிவு வங்கிகளில் மேற்கொள்ளப்பட மாட்டாது. காசோலைகள் வங்கியின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.வங்கிகளுக்கு வெளியே அல்லது ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்தலாம். ஏடிஎம்கள் 24 மணி நேரமும் செயல்படும்.வழக்கமாக பெரிய கூட்டம் கூடும் கிளைகளில் மாவட்ட மேலாளர் மூலம் கூட்டத்தை கவனிக்க காவல்துறை உதவியை நாட வேண்டும் வங்கியில் உள்ள பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.வங்கிகளில் பணிபுரியக்கூடிய இணை நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த நடைமுறைகள் அனைத்தும் 30ம் தேதி வரை அமலில் இருக்கும். கொரோனா தொற்று பரவலை தடுக்க வங்கியாளர்கள் குழுமம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை