இன்று பத்தாம் வகுப்பு மறு கூட்டல் முடிவு

 

சிவகங்கை, ஆக.18: அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2023, ஜூன், ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய மொத்த மாணவர்களில், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது.

இணையத்தளத்தில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விபரங்களை பதிவு செய்து மறுகூட்டல் முடிவு மற்றும் திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான புதிய திருத்தப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை