இன்று தை கிருத்திகை திருநாள்: அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திகடன்

திருவண்ணாமலை: தை கிருத்திகையான இன்று திரவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தை கிருத்திகையொட்டி முருகர் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். இதையொட்டி அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டதும் கம்பத்துஇளையனார் சன்னதி மற்றும் கோபுரத்து இளையனார் சன்னதியில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கவாடி எடுத்து மாடவீதியில் வலம் வந்து முருகபெருமானை வணங்கினர்.  இதேபோல் திருவண்ணாமலை அடுத்த மங்கலம், எறும்பூண்டி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள  முருகர் கோயில்களில் தேர்த்திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பறக்கும் காவடி எடுத்தும், ேதர் இழுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை