திருப்பூர், செப், 25: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பாண்டியன்நகர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அலுவலகத்தில் புதியதாக தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தொட்டிகளில் தானியங்கியாக செயல்படும் ஸ்கேடோ வால்வு பொருத்தப்பட்டதை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆய்வு செய்தார். இதில் துணை மாநகர பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.