சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் பணியாற்றி வந்த 22 செயல் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கண்காணிப்பாளர் சிவமணி, நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலராகவும், ரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் கண்காணிப்பாளர் வேல்முருகன் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலராகவும், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கண்காணிப்பாளர் முருகன் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுபோல, சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் செயல் அலுவலர் மாரி முத்து வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் செயல் அலுவலராகவும், மதுரை திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில் செயல் அலுவலர் வெண்மணி சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் செயல் அலுவலராகவும், பாபநாசம் பூலோகநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் சுதா சோழவந்தான் ஜெனகை நாரயணப்பெருமாள் கோயில் செயல் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் இளங்குமரன் நெல்லை அரியநாயகிபுரம் கைலாசநாதசுவாமி கோயில் செயல் அலுவலராகவும், நாகை சவுரிராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலர் மாதவ பெருமாள் தஞ்சாவூர் அரண்மணை தேவஸ்தானம் செயல் அலுவலராகவும், சிவகிரி ஆர்.கே.நாச்சியாளர் கட்டளை ராணி கருப்பாயி கோயில் செயல் அலுவலர் முருகன் சிங்கம்பட்டி சொரிமுத்து அய்யனார் கோயில் செயல் அலுவலராகவும், திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் செயல் அலுவலர் சுசில்குமார் திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயில் செயல் அலுவலராகவும், நீடாமங்கலம் சதுரங்க வல்லபநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் ஜெகநாதன் சிவகிரி ஆர்.கே.நாச்சியாளர் கட்டளை ராணி கருப்பாயி கோயில் செயல் அலுவலர் என மொத்தம் 22 செயல் அலுவலர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
இந்து சமய அறநிலையத்துறையில் 22 செயல் அலுவலர்கள் பணியிட மாற்றம்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு
previous post