சேலம், ஜூலை 20: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரியும், தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் இந்திய குடியரசு கட்சி (ஆர்வி) சார்பில் நேற்று, சேலம் கோட்டை மைதானத்தில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநில தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில், மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், மாநில செயலாளர் சேகர், இளைஞரணி பொதுச்செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.