இணையவழி விரைவு சதுரங்கப் போட்டி வேலம்மாள் பள்ளி மாணவன் மீண்டும் சாதனை

திருவள்ளூர்: சென்னை, முகப்பேர், வேலம்மாள் பள்ளியின் மாணவன் பிரக்ஞானந்தா ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் எனப்படும் இணையவழி விரைவு சதுரங்கப்போட்டியில் மீண்டும் சாதனை படைத்துள்ளார். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் எனப்படும் இணையவழி விரைவு சதுரங்கப் போட்டியில் 8 வது சுற்றில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா உலக அளவில் பிரசித்திபெற்ற சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தனது அபார திறமையின் மூலம் வியப்பில் ஆழ்த்தினார். பிரக்ஞானந்தாவின் இந்த அற்புதமான வெற்றியானது 39 நகர்வுகளில் கறுப்பு சதுரங்க காய்களுடன் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் கார்ல்சனின் 3 தொடர் வெற்றிகளை முடிவுக்கு கொண்டு வந்த பிரக்ஞானந்தா, மேக்னஸை வீழ்த்திய 3 வது இந்தியராக சாதனை படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சதுரங்க சாம்பியன் பிரக்ஞானந்தாவின் சாதனையை பள்ளியின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதல்வர் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டி மென்மேலும் வெற்றிபெற வாழ்த்தினர்….

Related posts

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை : வனத்துறை எச்சரிக்கை

மூலவரை தரிசித்த சூரிய பகவான்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து ஓரிரு நாட்களில் துவக்கம்