இடஒதுக்கீடுக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: சட்டக் கல்லூரி மாணவரான சிவானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்,‘‘இடஒதுக்கீடு முறை பாகுபாட்டை ஊக்குவிப்பது என்பது ஜாதிய கட்டமைப்பை வலுப்படுத்துவதாக இருக்கிறது என தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்போது, சட்ட மாணவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு என்பது விளம்பரத்திற்கு தாக்கல் செய்துள்ளது போன்று இருக்கிறது. இதில் பொதுநலம் இருப்பதாக நீதிமன்றத்திற்கு தெரியவில்லை. இதில் மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப்பெறவில்லை என்றால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து வழக்கை தள்ளுபடி செய்தார். இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது….

Related posts

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்