இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து அணி: டக்வொா்த் லீவிஸ் முறையில் 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஆஸ்திரேலியா: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வலுவான இங்கிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அணி அதிர்ச்சி அளித்தது. மேலபோர்னில் குரூப் 1 பிரிவில் நடைபெற்ற இப்போட்டி மழை குறுக்கீடு காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 19.3 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. கேப்டன் பல் பிரீன் அதிகபட்சமாக 62 ரன்கள் சேர்த்தார். 158 ரன்களை இலக்காக கொண்டு பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வார்த்தது. 86 ரன்களை சேர்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சற்றே தாக்குபிடித்த டேவிட் மலேன் 35 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அப்போது இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டிற்கு 105 ரன்கள் சேர்த்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொா்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.    …

Related posts

சீனா ஓபன் டென்னிஸ் வது சுற்றில் ஹடாஜ் மாயா

88 ரன்னில் சுருண்டு ஃபாலோ ஆன்; தோல்வியின் பிடியில் நியூசிலாந்து

சில்லி பாயின்ட்…