இஆர்கே மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

அரூர், செப்.24: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான செஸ் போட்டிகள், மோளையானூர் வெற்றி விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற எருமியாம்பட்டி இ.ஆர்.கே., மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நிவேதனன் முதலிடமும், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நிஷாந்தன் 2ம் இடமும், ஸ்ரீதர் 3ம் இடமும், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் மாணவி புகழரசி 3ம் இடமும் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் தீத்துமாலை ஆகியோரை இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் பாராட்டி பரிசு வழங்கினார்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்