ஆலங்குளம் அருகே பெண் மாயம்

ஆலங்குளம்,ஜூன் 2: ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருநாதன் மகன் முருகேசன் (31). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 9 வயதில் ஆண் குழந்தை, 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி உமா மகேஸ்வரி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. அவரது கணவர் முருகேசன் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை