ஆர்.கே.பேட்டை அருகே மின்கசிவால் 2 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே மின் கசிவால் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது. ஆர்.கே.பேட்டை அருகே ராகவநாயுடுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு தோட்டம் சாகுபடி செய்துள்ளார். அவை, அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில், நேற்று திடீரென விவசாய நிலத்திற்கு மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் காற்றின் வேகத்திற்கு  உரசிக்கொண்டதில் மின் பொறி ஏற்பட்டு தீ பரவியது. அப்போது, காற்று வேகமாக வீசியதால் கரும்பு தோட்டம் முழுவதும் தீ வேகமான பரவியது. இதனை கிராம மக்கள் ஒன்று திரண்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைப்பதற்குள் தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. கரும்பு தோட்டத்திற்கு அருகில் வேறு ஏதும் கரும்பு தோட்டம் இல்லாததால் தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது….

Related posts

புதிய குற்றவியல் சட்டங்கள் – நீதிமன்ற புறக்கணிப்பு

செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு