பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மைலாடும்பாறை, அய்யனேரி ஆகிய கிராமங்களில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஒன்றிய செயலாளர்கள் சி.என்.சண்முகம், பி.பழனி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திலகவதி ரமேஷ், திமுக நிர்வாகிகள் சிலம்பு பன்னீர்செல்வம், நாகபூண்டி வெடி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்….