ஆர்ப்பாட்டத்துக்கு வந்த விவசாயி தற்கொலை முயற்சி-பரபரப்பு

பொள்ளாச்சி, ஜூன் 23: பொள்ளாச்சி டிஎஸ்பி அலுவலகத்தை நேற்று கள் இறக்க அனுமதிகோரி விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். அப்போது, திடீர் என ஒரு விவசாயி தான் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று விவசாயி வைத்திருந்த பூச்சி மருந்தை பறித்தனர். அந்நேரத்தில், போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்காக வந்த விவசாயிகளில் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை