Monday, October 7, 2024
Home » ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் டெபாசிட் பணத்தை பெற அலுவலகம் அமைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் டெபாசிட் பணத்தை பெற அலுவலகம் அமைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

by kannappan

சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வைப்புதாரர்கள்  தங்களது வைப்புத் தொகையை திரும்ப பெறுதல் தொடர்பாக முறையிடுவதற்கான  அலுவலகமாக கீழ்கண்ட இடத்தில் அலுவலகம் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வைப்புதாரர்கள் தங்களது வைப்புத் தொகையை திரும்ப பெறுதல் தொடர்பாக முறையிடுவதற்கான அலுவலகமாக , மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், சென்னை மாவட்டம்,  சென்னை மாவட்ட ஆட்சியரகம்,  எண் 62,  சிங்காரவேலர் மாளிகை, 4ம் தளம், ராஜாஜி சாலை, சென்னை – 600 001.                எனவே, மேற்படி நிறுவனத்தில், வைப்பீடு தொகையாக பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கு தேவையான ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களை சார்ந்த வைப்புதார்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள வேலை நாட்களில் கீழ்காணும் முகவரியில் காலை 10 முதல் மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம்.  மனுக்கள் பெறப்படும் முகவரி மாவட்டத்தின் பெயர் நாள்   மாநகராட்சி சமுதாயக்கூடம், வார்டு-58, ராஜா முத்தையா சாலை, கண்ணப்பர் திடல், சென்னை – 600003 சென்னை 18,19ம் தேதி  மற்றும்  திருவள்ளூர் 20ம் தேதி காஞ்சிபுரம் 21ம் தேதி, வேலூர் 22ம் தேதி,   ராணிப்பேட்டை 25ம் தேதி   செங்கல்பட்டு 26ம் தேதி,  திருவண்ணாமலை 27ம் தேதி, திருப்பத்தூர் 28ம் தேதி, கிருஷ்ணகிரி 29ம் தேதி, தர்மபுரி ஆகஸ்ட் 1ம் தேதி, விழுப்புரம் 2ம் தேதி, கடலூர் 3ம் தேதி,   கள்ளக்குறிச்சி 4ம் தேதி,   பெரம்பலூர் 5ம் தேதி. சேலம் 8ம் தேதி, ஈரோடு 10ம் தேதி, நாமக்கல் 11ம் தேதி, அரியலூர் 12ம் தேதி,   மயிலாடுதுறை 16ம் தேதி,  திருச்சி 17ம் தேதி, கரூர் 18ம் தேதி, தஞ்சாவூர் 22ம் தேதி, திருவாரூர் 23ம் தேதி,  நாகப்பட்டினம் 24ம் ேததி,   புதுக்கோட்டை 25ம் தேதி,  சிவகங்கை 26ம் தேதி,  ராமநாதபுரம் 29ம் தேதி,  நீலகிரி 30ம் தேதி, கோவை செப்டம்பர் 1ம் தேதி  திருப்பூர் 2ம் தேதி திண்டுக்கல் 5ம் தேதி, தேனி 6ம் தேதி,   மதுரை 7ம் தேதி, விருதுநகர் 8ம் தேதி, தென்காசி 9ம் தேதி,   தூத்துக்குடி 12ம் தேதி, திருநெல்வேலி 13ம் தேதி, கன்னியாகுமரி 14ம் தேதி பிற மாநிலத்தைச் சார்ந்த முதலீட்டாளர்களின் மனுக்கள் 14ம் தேதிக்கு பிறகு பெறப்படும்….

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi