ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது

மதுரை, ஜூலை 11: மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ராமையாதெரு கடைசி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள அப்பள கம்பெனி அருகே 3 பேர் வாளுடன் சுற்றித் திரிந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து நடத்திய விசாரணையில், ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு வீரபாண்டி(25), ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் 2வது தெரு கார்த்திக் கணேஷ்(30), இவர்களுடன் 17 வயது சிறுவன் என்று தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த வாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளதும், செலவுக்கு பணம் தேவைப்படுவதால் வழிப்பறி செய்யும் திட்டத்தில் ஈடுபட முயன்றதும் தெரிய வந்தது.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து