ஆம் ஆத்மியின் 3 எம்பிக்கள் பதவியேற்பு

புதுடெல்லி: ஆம் ஆத்மியை சேர்ந்த 3 பேர் மாநிலங்களவை எம்பிக்களாக நேற்று பதவியேற்றுக்கொண்டனர். பஞ்சாப் மாநிலத்தில் காலியாக இருந்த 3 மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடந்த மார்ச்சில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வேறு எந்த அரசியல் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட ராகவ் சத்தா, அசோக் மிட்டால் மற்றும் சஞ்சீவ் அரோரா ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவை எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர். மூன்று பேரும் நேற்று எம்பிக்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்….

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்