கொடைக்கானல், ஜூலை 9: கொடைக்கானல் நகர் பகுதியின் பல்வேறு இடங்களில் ஆபத்தான விழும் நிலையில் மரங்கள் உள்ளன. இதுபற்றி நகராட்சிக்கு அந்தந்த பகுதி மக்கள் புகார் செய்திருந்தனர். இங்கிருந்த மரங்கள் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு மீதும் அருகிலிருந்த குடியிருப்பு பகுதிகள் மீதும் விழும் நிலையில் ஆபத்தாக இருந்தது. தற்போது இவை அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டது.
இதற்கு இப்பகுதி மக்கள் நகராட்சிக்கு நன்றி தெரிவித்தனர். இதற்கிடையே அண்ணா சாலை பகுதியில் ஆபத்தான மரங்கள் முறையாக வெட்டப்படுகின்றனவா என நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் அப்பாஸ் அலி ஆகியோர் ஆய்வு செய்தனர்.