ஆன்லைன் வகுப்புக்கு தனியறை நிர்வாண படங்களை எடுத்து வெளியிட்ட 15 வயது மாணவி: பெற்றோருக்கு மாரடைப்பு

அகமதாபாத்: கொரோனா பரவலை தடுக்க பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இதற்காக, பெற்றோர்கள் கஷ்டப்பட்டு வாங்கித்தரும் செல்போன்களை, பல மாணவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். குஜராத்மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. தனது மகள் இடையூறின்றி படிப்பதற்காக பெற்றோர் தனி அறையையும் கொடுத்து, நவீன செல்போனையும் வாங்கி கொடுத்தனர். ஆனால், அந்த மாணவி படிப்பதற்கு பதிலாக, தனது முழு நிர்வாண படங்களை எடுத்து இணையதளங்களில் பதிவேற்றினார். அதோடு, தனது உறவுக்கார பெண்ணையும் நிர்வாண படங்களை பதவியேற்றும்படி வலியுறுத்தினார். அந்த பெண்ணின் பெற்றோர் மூலமாக இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும், மாணவியின் பெற்றோர் 2 பேருக்குமே அதிர்ச்சியில்  மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள், சிகிச்சை பிறகு வீடு திரும்பினர். பின்னர், மகளை மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்றனர். அவர்கள், ‘நீ செய்திருக்கும் செயல், சைபர் சட்டப்படி குற்றம். உன்னை கைது செய்து சிறையில் அடைக்க முடியும்,’ என்று எடுத்து கூறினர். பின்னர், மாணவி தனது செயலுக்காக வருந்தி, திருந்தினார்….

Related posts

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பது பற்றி பாஜக எம்.எல்.ஏ தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரிக்கப்படும்: டி.கே சிவகுமார்

அதானி துறைமுகத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ராகுல் காந்தி கேள்வி

தொழிலதிபர் அம்பானி தனது வீட்டு திருமணத்திற்கு செலவு செய்தது மக்களின் பணம்: ராகுல்காந்தி பேச்சு