ஆந்திராவை சேர்ந்தவர் உட்பட 3 வாலிபர்கள் கஞ்சாவுடன் கைது செய்யாறில் போலீஸ் சோதனை

செய்யாறு, ஜூலை 16: செய்யாறில் கஞ்சா விற்ற ஆந்திராவை சேர்ந்தவர் உட்பட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்யாறு டவுன், ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற 3 வாலிபர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் செய்யாறு காமராஜர் நகரை சேர்ந்த அபினேஷ்(22), வெங்கட்ராயன்பேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன்குமார்(19), ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடா தாலுகா ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(19) என்பதும், அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 10 கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து