சென்னை: ஆதிதிராவிடர் நல பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான பல்வகை செலவினங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மணிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது:ஆதிதிராவிடர் நல பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முடி வெட்டிக் கொள்வதற்கும், எண்ணெய், சோப்பு, சீயக்காய் மற்றும் சலவைத்தூள் வாங்குவது போன்ற பல்வகை செலவினங்களை மேற்கொள்ள பள்ளி விடுதி மாணாக்கருக்கு மாதம் ஒன்றுக்கு முறையே ₹75ல் இருந்து ₹150 ஆகவும், ₹50ல் இருந்து ₹100 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ₹5 கோடியே 32 லட்சத்து 87,750 நிதி ஒப்பளிப்பு செய்து உரிய ஆணை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….