ஜெயங்கொண்டம். ஜூலை 6: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக கலிலூர் ரஹ்மான் பொறுப்பேற்றார். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக கலிலூர் ரஹ்மான் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் ஜெயங்கொண்டத்தில் வட்டாட்சியராக இருந்து பணி மாறுதல் பெற்று ஆண்டிமடத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.