ஆண்டிபட்டியில் இருந்து கொட்டோடைப்பட்டிக்கு பேருந்து சேவை துவக்கம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

 

ஆண்டிபட்டி, செப். 2: ஆண்டிபட்டியில் இருந்து கொட்டோடைப்பட்டி பகுதிக்கு பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். மேலும் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜனிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் நேற்று முதல் ஆண்டிபட்டியில் இருந்து கொட்டோடைப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வசதி தொடங்கப்பட்டது.

ஆண்டிபட்டி பேரூந்து நிலையத்தில் இருந்து பேருந்தை எம்எல்ஏ மகாராஜன் தலைமையில் கொடியசைத்து துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் சரவணன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் ராமசாமி, புள்ளிமான்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் தவசி, துணைத்தலைவர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு