ஆட்டோ தீவைத்து எரிப்பு

நெல்லை: நெல்லையை அடுத்த பேட்டை சத்யாநகர் குடிசை மாற்று குடியிருப்பு விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் நல்லையா மகன் இசக்கி (32). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டின் முன்பாக ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் திடீரென அவரது ஆட்டோ தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பது கண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் இசக்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து இசக்கி மற்றும் குடும்பத்தினர் தண்ணீரை ஊற்றி தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் ஆட்டோ ஒரு பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து இசக்கி, பேட்டை போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் நந்தினி வழக்கு பதிந்து அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து ஆட்டோவை தீ வைத்து எரித்த மர்ம நபரை தேடி வருகிறார்.

 

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்