ஆடை அணிவதை வைத்து பெண்களை விமர்சிப்பதா? சமந்தா ஆவேசம்

சென்னை: சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை சமந்தா, விலையுயர்ந்த பச்சை நிற கவுன் அணிந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட அவரது கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது. இதையடுத்து பல்வேறு தரப்பினர் சமந்தாவை கடுமையாக விமர்சித்து பல்வேறு கமெண்டுகளை பதிவிட்டனர். இதுகுறித்து அறிந்த சமந்தா ஆவேசத்துடன் கூறியதாவது: பெண்கள் அணிகின்ற ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் அனைவரும் நிறுத்த வேண்டும். பெண்களின் உடை, அவர்களின் இனம், கல்வி, சமூக அந்தஸ்து, தோற்றம், தோலின் நிறம் என்று ஒரு பெரிய பட்டியலே நீண்டு கொண்டிருக்கிறது. நாம் 2022ல் இருக்கிறோம். இன்னமும் பெண்களை அவர்கள் அணியும் ஆடையை வைத்து ஒப்பிடு வதையும், மதிப்பிடுவதையும் உடனே நிறுத்துங்கள். அவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, நம்மை மேம்படுத்தும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். நம் லட்சியத்தை வேறொருவர் மீது வைப்பது யாருக்கும் எந்த நன்மையையும் செய்யாது. ஒரு நபரை நாம் அளவிடும் மற்றும் புரிந்துகொள்ளும் விதத்தை மீண்டும் மாற்றி எழுதுவோம்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை