ஆடி வெள்ளியை முன்னிட்டு பொன்னமராவதி சிவன் கோயிலில் 1008 விளக்கு பூஜை

 

பொன்னமராவதி,ஜூலை22: பொன்னமராவதி சிவன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 1008 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். பொன்னமராவதி ஆவுடையநாயகி அம்பாள் சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் 1008 பெண்கள் பங்குபெற்று திருவிளக்குப்பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் சொல்ல அதனை பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் சொல்லி வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜாஅம்பலகாரர், சேதுபதி விழாக்குழு நிர்வாகிகள் பாஸ்கர், ராணி, சாத்தையா, சரவணன், காமராஜ், மணிகண்டன், இளங்கோ உட்பட பலர் கலந்து கொணடனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து