ஆடி மாத தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

 

வேலாயுதம்பாளையம், ஆக. 9: ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் புன்னம்சத்திரம் அருகே உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோயில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோயில், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோயில், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்