காரைக்குடி, செப்.11: காரைக்குடியில் உள்ள சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தா விட்டால் பள்ளிகளில் அக்குழுவினர் நுழைய விடாமல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல் எஸ்.புதூர் வட்டாரத்தில் மாவட்டத் தலைவர் பொன்னுச்சாமி தலைமையிலும். திருப்புவனம் வட்டாரத்தில் மாவட்ட பொருளாளர் முத்துகுமார், திருப்பத்தூர் வட்டாரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.