ஆகாயத் தாமரையால் தூர்ந்துள்ள புழல் ஏரி: மழைநீர் சேமிப்பதில் சிக்கல்

புழல்: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் ஒன்றான புழல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. தற்போதைய தண்ணீர் இருப்பு 3,048 மில்லியன் கன அடியாக உள்ளது. 307 கனஅடி வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்கள் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 214 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. கோடை காலத்திலும் இந்த ஏரியில் அதிகப்படியான தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், இந்த ஏரியில் ஆகாய தாமரைகள் படர்ந்து, தூர்ந்துள்ளதால், மழைக்காலங்களில் போதிய தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளதுடன், குடிநீர் மாசடையும் அவலம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக புழல் ஏரியில் ஆய்வு செய்து, ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  இதேபோல், சோழவரம் ஏரியின் உபரி நீர் புழல் ஏரியில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாயத் தாமரைகள் வளர்ந்து தூர்ந்துள்ளது. இதையும் அகற்றி, கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை