ஐதராபாத்: தெலுங்கு படங்களுக்கான படப்பிடிப்புகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் கில்டு வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா காலத்துக்கு பிறகு திரைத்துறையின் நிலைமை சரியாக இல்லை. ஒரு சில படங்கள் பல கோடிகளை வசூல் செய்தாலும், பெரும்பாலும் படங்கள் தோல்வியை தழுவியுள்ளன. இந்நிலையில் தயாரிப்பு செலவுகளும் கூடிக் கொண்டே செல்கிறது. பல்வேறு செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகிறது. இதனால் அதுவரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தெலுங்கு படங்களின் படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. பிரபாஸ் நடிக்கும் சலார், ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கும் படம் என 3 படங்கள், சிரஞ்சீவி நடிக்கும் போலா சங்கர், காட்பாதர், பெயரிடப்படாத படம் என 3 படம், ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு நடிக்கும் படங்கள் உள்ளிட்ட பெரிய படங்களின் ஷூட்டிங் நடந்து வருகிறது. திடீரென ஷூட்டிங் நிறுத்துவதால், இந்த படங்கள் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது….