அழுக்கு படுக்கையில் நீங்கள் படுப்பீர்களா? துணைவேந்தரை நோகடித்த அமைச்சர்

சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பரித்கோட்டில் உள்ள குரு கோவிந்த் சிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் ஜூரமஜ்ரா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நோயாளிகளுக்காக படுக்கைகள் மிகவும் அழுக்காக இருந்ததை கண்டு கோபமடைந்த அவர், ‘ஏன் இவ்வளவு அழுக்காக இருக்கின்றன?’ துணை வேந்தர் ராஜ் பகதூரிடம் (71) கேட்டார். அதற்கு அவர் அளித்த பதிலால் திருப்தி அடையாத மஜ்ரா, ‘இதுபோன்ற படுக்கையில் நீங்கள் படுப்பீர்களா?’ என்று கேட்டதோடு, அதில் பகதூரை படுக்கவும் வைத்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜ் பகதூர் மிகப்பெரிய மருத்துவர். பல ஆயிரம் அறுவை சிகிச்சைகளை செய்து புகழ் பெற்றவர். இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்துள்ள அவர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தன்னை உடனடியாக விடுவிக்கும்படியும் முதல்வர் பக்வந்த் மானுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்….

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 4 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம்: மாஜி முதல்வர் பிரசாரம் ஒத்திவைப்பு