அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றிய வைக்கோல் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

வத்திராயிருப்பு, ஜன.5: வத்திராயிருப்பு பகுதியில் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது. வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல் அறுவடையின் போது வரும் வைக்கோல்களை வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளாவிற்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல்களை ஏற்றும்போது அளவுக்கு அதிகமாக வாகனங்களில் ஏற்றுவதால் சாலை முழுவதும் மறைக்கும்  அளவிற்கு உள்ளது. இவ்வாறு கொண்டு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அது மட்டுமல்லாது போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதால் பிற வாகனம் செல்வதற்கு வழியில்லாமல் மிகுந்த சிரமத்துடனேயே சென்று வருகின்றனர். அளவுக்கு அதிகமாக வைக்கோல்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்