செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சட்டுவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜலு(82). இவரது மனைவி தனலட்சுமி(74). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனலட்சுமி கடந்த 10ம்தேதி வீட்டில் உள்ள கழிவறையில் தவறி விழுந்து விட்டாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தபோது, ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது.இதையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தனலட்சுமியும், வரதராஜலுவும் கீழ்புதுப்பாக்கம் பகுதியில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றனர். அங்கு தனலட்சுமி பயத்துடன் காணப்பட்டாராம். இதுபற்றி அவரது கணவர் வரதராஜலு கேட்டுள்ளார். அதற்கு தனலட்சுமி, ஆபரேஷன் செய்தால் நான் பிழைப்பேனோ, இல்லையோ’ என்று கூறி புலம்பியுள்ளார். அவருக்கு வரதராஜலு ஆறுதல் கூறியுள்ளார். என்றாலும் தொடர்ந்து ஆபரேஷன் பயத்தில் தம்பதியினர் இருந்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த தனலட்சுமி, வரதராஜலு இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் விஷம் குடித்துள்ளனர். நேற்று அதிகாலை மயங்கி கிடந்த இருவரையும், குடும்பத்தினர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்wதும் பலனின்றி நேற்று தனலட்சுமி, வரதராஜலு இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….
அறுவை சிகிச்சைக்கு பயந்து கணவன், மனைவி தற்கொலை
previous post