அறுந்து கிடந்த மின் வயரை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து மாடு, பெண் பரிதாப பலி: பெரியபாளையம் அருகே சோகம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அறுந்து கிடந்த மின் வயரை கவனிக்காமல் மிதித்த மாடு, பெண் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாகினர். பெரியபாளையம் அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகையன். இவரது மனைவி வசந்தா(53), கூலித்தொழிலாளி. இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து மின்வயர்கள் அறுந்து விழுந்தது. அந்த வகையில் அவரது வீட்டின் அருகே கனமழையால் மின்வயர் அறுந்து கீழே விழுந்தது. இதையடுத்து, நேற்று காலை பசுமாடு அங்கு வந்தது. அப்போது, அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலியானது. மேலும் வசந்தா வீட்டை விட்டு வௌியே வந்தார். அப்போது, அறுந்து கிடந்த மின்வரை கவனிக்காமல் அவரும் மின் வயரை எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் வசந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது….

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!