புதுடெல்லி: பிரதமர் மோடி இன்று 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பல்கலையின் அமராவதி சாலை வளாகத்தில் இன்று காலை 108வது அறிவியல் மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இந்திய அறிவியல் மாநாட்டில் நீடித்த வளர்ச்சி, மகளிருக்கு அதிகாரமளித்தல், அவற்றை அடைவதற்கான அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு ஆகிய விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்படும். இந்த மாநாட்டின் தொழில்நுட்ப அமர்வுகள் 14 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது….