அறியலாம் ஆப்ஸ்!

டிஜியாத்ராஎவ்வளவு படித்திருந்தாலும் சரி, எத்தனை நாடுகளுக்குப் பிரயாணம் செய்திருந்தாலும் சரி இன்னமும் இந்த விமான நிலையத்தில் செக்-இன் வேலைகள் மட்டும் மண்டைவலியாகவே உள்ளன. அதற்குதான் இந்த டிஜியாத்ரா செயலி பயன்படுகிறது. இந்த செயலியை பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களில் அனைத்து விதமான செக்-இன் சோதனைகளும் முடிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வாரணாசி உள்ளிட்ட ஒருசில விமான நிலையங்களில் டிஜியாத்ரா மூலம் பயணிகளை ஒருசில நிமிடங்களில் சோதனை செய்யும் நடைமுறை அமலில் உள்ள நிலையில் தற்போது டெல்லி விமான நிலையத்தில் டிஜியாத்ரா முறையின் மூலம் பயணிகளை அனுமதிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக உள்நாட்டு விமான பயணத்தில் அமலுக்கு வந்திருக்கும் இந்தச் செயலி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக மாறியிருக்கிறது. விரைவில் இந்தியா முழுவதும் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. …

Related posts

நிராகரிப்பு என்பது வெற்றிக்கான வாய்ப்பு

இயற்கையான முறையில் குளியல் பொடி!

வைரலோ வைரல்