அறந்தாங்கி, மார்ச் 31: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்த சென்ற 1லட்சத்து 29 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும்படை கைபற்றினர். அறந்தாங்கி-புதுவாக்கோட்டை சாலை இடையாறு கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அறந்தாங்கியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 1 லட்சத்து 29 ஆயிரத்து 726 பணத்தை கைப்பற்றி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், அறந்தாங்கி ஆர்டிஓவுமான சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.