அறந்தாங்கி, ஆக. 8: அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழாநாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அமைச்சர் ரகுபதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மவுன ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அங்கு வைக்கப்பட்டு இருந்த கலைஞரின் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.