அறங்காவலர் குழுவினர் பொறுப்பு ஏற்பு

 

வெள்ளகோவில், ஆக. 27: வெள்ளகோவில் அருகே உள்ள மேட்டுப்பாளையம் நாட்ராயசாமி நாச்சிமுத்து அய்யன் கோவில் அறங்காவலர் குழுவினர் பொறுப்பு ஏற்றனர். வெள்ளகோவில் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற நாட்ராய சாமி நாச்சிமுத்து அய்யன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர்களாக வெள்ளகோவில் திமுக ஒன்றியசெயலாளர் மோளகவுண்டன்வலசு சந்திரசேகரன், சிவசுப்ரமணியன், நாகராஜ், சுரேஷ், தங்கவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் அறங்காவலர் உறுப்பினர்களுக்கு திருப்பூர் மாவட்ட இந்து சமயஅறநிலைய துறை உதவி ஆணையர் (பொறுப்பு) கருணாநிதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர்ராசி முத்துகுமார், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி முருகானந்தன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மோகனச்செல்வம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், லோகநாதன் மற்றும் சக்திகுமார், செல்வராஜ், தங்கமுத்து உட்பட ஒன்றிய நகர நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், செயல் அலுவலர் திலகவதி மற்றும் கோவில் பணியாளர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும்தெரிவித்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்