அரூர், ஜூலை 31: அரூர் கச்சேரிமேட்டில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர். சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்ய ஏலத்தில் கலந்துகொள்கின்றன்ர. நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 100 விவசாயிகள், 400 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். எம்சி 5 ரகம் பருத்தி குவிண்டால் ₹6,562 முதல் ₹7,433 வரை ₹10 லட்சத்திற்கு ஏலம் போனது.