அரூர்,மே 21: அரூர் கோவிந்தசாமி நகர் கோல்டன்சிட்டி பகுதியையொட்டி கொளகம்பட்டி காப்பு காடு உள்ளது. வனப்பகுதியிலிருந்து உணவு தண்ணீர் தேடி அவ்வப்போது மான்கள் குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம். அது போல் தண்ணீர் தேடி வந்த மானை தெருநாய்கள் துரத்தி கடித்ததில் இறந்தது. இது குறித்து தகவல் அறிந்து வனத்துறையினர் மானை அங்கிருந்து கொண்டு சென்று புதைத்தனர்.
அரூரில் நாய் கடித்து மான் சாவு
previous post