அரூரில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

அரூர், நவ.15: அரூரில் அனைத்து கட்சி சார்பில் தாசில்தார் அலுவலகம் முன்பு, பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் நடத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் குமார், சிபிஐ தமிழ்குமரன், திமுக தர்மபுரி மேற்கு மாவட்ட ஐடிவிங் ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், பேரூர் துணை செயலாளர் வின்னரசன், மாநில விவசாய aஅணி முருகன் தமுமுக சுபேதார், நியாஸ் நூர், ஜெய்சான், பாஷா, குமார், மல்லிகா, குமார், மாது, திமுக மாவட்ட மருத்துவர் அணி துணைத் தலைவர் திருவேங்கடம், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கமலநாதன், விசிக மொரப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திருலோகன், தொகுதி துணை செயலாளர் கேசவன், ஒன்றிய நிர்வாகிகள் ராமமூர்த்தி, தீரன்தீர்த்தகிரி, மகளிரணி சாக்கம்மாள், பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை