திருவில்லிபுத்தூர், அக்.21: அருள்மிகு கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் பி.பார்ம் 32வது பேட்ச் மற்றும் பார்ம் டி 8வது பேட்ச் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா செயலாளர் முனைவர் சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் வெங்கடேஷன் வரவேற்புரை ஆற்றினார்.
சிவகாசி இஎஸ்ஐ மெடிக்கல் சூப்பிரன்டென்ட் டாக்டர் அசோக் தலைமை விருந்தினராகவும் முன்னாள் மாணவரும் ஆரோவின் பார்மசூட்டிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், பார்மா இன்டெலிஜென்ஸ், மெக்மெட் இன்டர்நேஷனல், சயின்ஸ்டெக், ஆரோவின் ட்ரேடிங் அகாடமி, ஜாப்ஸ்டிக் டெக்னாலஜிஸ் இயக்குனர் முனைவர் சரவணகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை பார்மசி கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.