அரியலூர் அரசு ஐடிஐ.ல் மாணவர்களுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு

 

அரியலூர். ஜூன் 22: அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின்படியும், அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் அறிவுரையின்படியும், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று அரியலூர் அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிலும் 300க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு, தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு, அதனால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியின் போது அரியலூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், தொழிற்பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை