திருமயம்:அரிமளம் அருகே சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்களில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முக்கியமானவர். இவரின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி ஊராட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 128 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சந்திர போஸின் திருவுருவப்படம் ஊராட்சி அலுவலகத்தில் வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓணாங்குடி ஊராட்சித் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திர போஸ் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்கினை நினைவு கூறப்பட்டது.