அரசு பஸ் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை

திருச்சி: ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு திருச்சி மண்டலம் சார்பில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து ஓட்டுனர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் சார்பில் நேற்று ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு மேலாண் இயக்குனரின் அறிவுறுத்தலின்படி பொது மேலாளர் வழிகாட்டுதலின்படி துணை மேலாளர் மற்றும் கிளை மேலாளர்கள் ஓட்டுநர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி ஓட்டுனர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் ஓட்டுனர் தினம் கொண்டாடப்பட்டது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி