அரசு பள்ளி மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சீனியர் கைப்பந்து போட்டி நடந்தது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து, மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதிபெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகள் லக்ஷன்யா, சந்தியா, அனிஷா, காவியா, புவனேஸ்வரி, ஸ்ரீமதி காவியா, யோகப்பிரியா, ஜெனா பிரியாமணி, செம்மொழி, கமலி ஆகியோரையும், அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயமணி, ராமகிருஷ்ணா, தனலட்சுமி ஆகியோரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமை ஆசிரியர்(பொ) சுகுணா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை