அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதி மேலாண்மை பயிற்சி

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், வெண்மணம்புதுர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி  ஜான் வர்கீஸின் வழிகாட்டுதலின் படி நிதி மேலாண்மை கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் எஸ்.பாண்டியன் பயிற்சி ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இதில் பாரத வங்கி மேலாளர் விக்னேஷ் பள்ளி மாணவர்களுக்கு நிதி, பங்கு சந்தை முதலீடு, பணம் சேமிப்பு கடன் மற்றும் ஓய்வூதியம் குறித்து பல்வேறு வகையான முறையில் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். மாணவர்களுக்கு அக்கவுண்ட் தொடங்கி வங்கி கணக்கில் பணம் செலுத்தும் வகையில் விண்ணப்பம் கொடுத்து பூர்த்தி செய்யும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டது.  மேலும், வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா