மன்னார்குடி: மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மன்னார்குடி வட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்தது. இதையடுத்து, துறை அலுவலர்கள் ஆய்வின் அடிப்படையில் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் புகழேந்தி கெழுவத்தூர், ராதாநரசிம்மபுரம், பாலை யக் கோட்டை மற்றும் குறிச்சி ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற் கொண் டார். நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற 9 ம் வகுப்பு மாணவன், குமரன் என்ற 10ம் வகுப்பு மாணவன் ஆகி யோரை நேரடியாக கண்டறிந்து பள்ளிக்கு செல்ல அறிவுரை வழங்கினார்.