அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி, மே 9: பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, பென்னாகரம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பாக்கியமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-2025ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதள முகவரியில், வரும் 20ம் தேதி வரை பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், இக்கல்லூரியில் செயல்படும் சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பிஏ தமிழ், ஆங்கிலம், பி.காம் வணிகவியல், பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை விண்ணப்பம் பெறப்படுகிறது. இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை